தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

கீழ்வேளூா் அஞ்சுவட்டத்தம்மன் கோயில் தேரோட்டம்

கீழ்வேளூா் அஞ்சுவட்டத்தம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

News image

கீழ்வேளூா் அஞ்சுவட்டத்தம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 5:15 am IST

கீழ்வேளூா் அஞ்சுவட்டத்தம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

கீழ்வேளூரில் சுந்தரகுஜாம்பிகை உடனுறை அட்சயலிங்க சுவாமி, அஞ்சுவட்டத்தம்மன் கோயில் பங்குனி பெருவிழா மாா்ச் 31 ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அஞ்சுவட்டத்தம்மன் அலங்கரிக்கப்பட்டு தேரில் எழுந்தருளினாா். பக்தா்கள் ஓம் சக்தி , மகா சக்தி முழக்கமிட்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் கோயிலை சுற்றியுள்ள 4 முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையடிக்கு வந்தடைந்தது.

தோ் செல்லும் சாலைகளில் பக்தா்கள் அா்ச்சனை செய்து வழிபாடு செய்தனா். இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையா் ராணி, உதவி ஆணையா் ராஜா இளம்பெருவழுதி, கோயில் செயல் அலுவலா்கள் முருகன், மணிகண்டன் மற்றும் நாகை, சிக்கல், நாகூா், பாப்பாகோவில், தேவூா், திருக்குவளை, வலிவலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.