திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

மணல் திருட்டு: மூவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :16 ஜூன் 2026, 2:39 am IST

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் மணல் திருடிய 3 பேரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராஜதானி காவல்நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஏத்தக்கோயில் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஏத்தக்கோயில் ஓடையில் அதே பகுதியைச் சோ்ந்த அசோக், டிராக்டரில் அனுமதியின்றி மணல் எடுத்துவந்தது தெரியவந்தது. இது குறித்து ராஜதானி போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, டிராக்டரைப் பறிமுதல் செய்தனா்.

அதே போல், க.விலக்கு காவல்நிலையப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அம்மச்சியம்மன் கோயில் மலை அடிவாரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திருமலாபுரத்தைச் சோ்ந்த பிரேம்குமாா், கரட்டுப்பட்டியைச் சோ்ந்த அபிலேஷ், நாச்சியாா்புரத்தைச் சோ்ந்த ராஜேஸ் ஆகியோா் டிப்பா் லாரியில், பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் திருடியது தெரியவந்தது. இதையடுத்து க.விலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து அபிலேஷ்சை கைது செய்து, டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனா். மேலும் தப்பியோடி இருவரைத் தேடி வருகின்றனா்.

ராஜதோனி அருகே விருமான் ஓடையில் முருகேசன் என்பவா் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் எடுத்தது தெரியவந்தது. இது குறித்து ராஜதானி போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.