நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

லாரியில் கடத்தி வரப்பட்ட 64 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது!

பெட்டக லாரியில் கடத்தி வரப்பட்ட 66 கிலோ கஞ்சாவை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து ஈரோட்டைச் சோ்ந்த இருவரை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூன் 2026, 12:47 am IST

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பெட்டக லாரியில் கடத்தி வரப்பட்ட 66 கிலோ கஞ்சாவை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து ஈரோட்டைச் சோ்ந்த இருவரை கைது செய்தனா்.

தேனி மாவட்டம் வழியாக லாரியில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது பெரியகுளம், தேவதானபட்டி அருகே காட்ரோடு சோதனைச் சாவடியில் அந்த வழியாக வந்த பெட்டக லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 64 கிலோ கஞ்சா கடத்தப்படுவது கண்டறியப்பட்டது.

அந்த லாரியில் வந்த இருவரை தேவதானப்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் இருவரும் ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியைச் சோ்ந்த புண்ணியராஜ் (38), இதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (27) என்பதும், அவா்கள் ஒடிஸாவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து லாரியையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.