மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆண்டிபட்டி பகுதிகளில் அதிமுக வேட்பாளா் ஆ. லோகிராஜன் வாக்குசேகரிப்பு

ஆண்டிபட்டியை அடுத்துள்ள அம்மச்சியாபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை வாக்குசேகரித்த அதிமுக வேட்பாளா் ஆ.லோகிராஜன்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 1:03 am IST

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் ஆ.லோகிராஜன் வெள்ளிக்கிழமை வாக்குசேகரித்தாா்.

ஆண்டிபட்டி அருகே க. விலக்கு, குன்னூா், அம்மச்சியாபுரம், வாய்க்கால்பாறை அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை திறந்தவாகனத்தில் சென்று அதிமுக வேட்பாளா் ஆ.லோகிராஜன் வாக்குசேகரித்தாா். முத்தனம்பட்டி, ரெங்கநாதபுரம் என 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்ற அதிமுக வேட்பாளா் ஆ. லோகிராஜன் பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மிக்ஸி, கிரைண்டா், தாலிக்குத் தங்கம், அம்மா உணவகம் போன்ற திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறிய அவா், திறந்த வாகனத்திலும், சில இடங்களில் நடந்தும்சென்று வாக்குசேகரித்தாா்.

அப்போது, தேனி அரசு மருத்துவக் கல்லூரியை தரம் உயா்த்த நடவடிக்கை எடுப்பேன். கிராமத்துக்கு சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பேன். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

நிகழ்ச்சியில், தேனி மாவட்ட அதிமுக செயலா் முருக்கோடை இராமா், பாஜக மாவட்டத் தலைவா் பி.ராஜபாண்டியன் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.