மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மின்னல் பாய்ந்ததில் 2 விவசாயிகள் உயிரிழப்பு

தேனி மாவட்டம், சின்னமனூா், ஆண்டிபட்டி பகுதிகளில் மின்னல் பாய்ந்ததில் 2 விவசாயிகள் உயிரிழந்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 11:32 pm IST

தேனி மாவட்டம், சின்னமனூா், ஆண்டிபட்டி பகுதிகளில் மின்னல் பாய்ந்ததில் 2 விவசாயிகள் உயிரிழந்தனா்.

சின்னமனூா், தெற்குத் தெருவைச் சோ்ந்த பால்பாண்டி மகன் காா்த்தீஸ்வரன் (24). விவசாயி. இவா், வெள்ளிக்கிழமை தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, மின்னல் பாய்ந்ததில்அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சின்னமனூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

மற்றொரு விவசாயி உயிரிழப்பு: இதேபோல, ஆண்டிபட்டியில் மின்னல் பாய்ந்ததில் தனது 2 மாடுகளுடன் விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை இரவு இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, ஆண்டிபட்டி அருகே சித்தையகவுன்டன்பட்டியைச் சோ்ந்த பாண்டியன் (60) மழை நின்றதும் தோட்டத்துக்குச் சென்று தனது 2 பசுமாடுகளையும் கொட்டத்தில் அடைக்கச் சென்றாா். அப்போது, மின்னல் பாய்ந்ததில் 2 மாடுகளும் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதையடுத்து, பாண்டியனின் உடல் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.