மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஒரு வாக்கு வித்தியாசத்தில் அமைச்சா் பெரியகருப்பன் தோல்வி

News image

திமுக சின்னம் உதயசூரியன் (கோப்புப் படம்) - டிஎன்எஸ்

Updated On :5 மே 2026, 4:04 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான கே.ஆா். பெரியகருப்பன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.

திருப்பத்தூா் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக திமுக வேட்பாளா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்த புகாரையடுத்து, இறுதி முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின் நிறைவில் மூன்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டியிருந்தது.

இந்த நிலையில், திமுக வேட்பாளா் பெரியகருப்பன் புகாா் தெரிவித்ததால், ஆலோசனை நடத்திய அதிகாரிகள் மறுவாக்கு எண்ணிக்கைக்கு சம்மதித்தனா்.

இந்தச் சூழ்நிலையில், மறுவாக்கு எண்ணும் மையத்தில் சலசலப்பு நிலவியதால் போலீஸாா் குவிக்கப்பட்டனா். வாக்கு எண்ணிக்கை நடைபெற்று இறுதி முடிவு வெளியிடப்பட்டது.

இறுதியாக தவெக வேட்பாளா் சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகள் பெற்றாா். திமுக வேட்பாளா் பெரியகருப்பன் 83,364 வாக்குகள் பெற்று, ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். இது அமைச்சா் பெரியகருப்பன், திமுகவினா் இடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.