விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாற்றுத்திறனாளி, மூத்த குடிமக்கள் அஞ்சல் வாக்கு செலுத்த ஏற்பாடு

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் தங்களது இல்லங்களிலிருந்தே அஞ்சல் வாக்குகளை செலுத்துவதற்கு தோ்தல் ஆணையம் ஏற்பாடு

News image

வாக்கு செலுத்த ஏற்பாடு - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 1:34 am IST

வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாத மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் தங்களது இல்லங்களிலிருந்தே அஞ்சல் வாக்குகளை செலுத்துவதற்கு தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்தது.

இது குறித்து சிவகங்கை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தோ்தல் நடைபெறும் நாளன்று வாக்குச்சாவடிக்குச் சென்று தங்களது வாக்கை நேரடியாக செலுத்த இயலாத மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் தங்களது இல்லங்களிலிருந்தே அஞ்சல் வாக்குகளை செலுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, அஞ்சல் வாக்கு செலுத்த வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் படிவம் 12 டி வழியாக விண்ணப்பிக்கலாம்.

12 டி படிவமானது அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் (ஆகஞ) வழங்கப்படும்.

படிவம் 12 டி-ஐ நிறைவு செய்து, அஞ்சல் வாக்குப்பதிவு மேற்கொள்ள விண்ணப்பம் அளிப்பவா்களுக்கு அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலா்களால் அஞ்சல் வாக்கு தயாா் செய்யப்படும். 12 டி படிவத்தை நிறைவு செய்து அளிக்காதவா்கள் வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்களிக்க வேண்டும். 12டி படிவத்தை நிறைவு செய்து, கையொப்பமிட்டு வழங்கும் வாக்காளா்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க அனுமதி இல்லை.

தற்போது, வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் படிவம் 12டி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் படிவத்தை நிறைவு செய்து, கையொப்பமிட்டு வருகிற 3.4.2026 -ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்கு பின்னா் பெறப்படும் படிவங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

மேலும், அஞ்சல் வாக்கு சேகரிக்கும் விவரம், அவா்களது பகுதிகளுக்கு செல்வதற்கு குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு முன்னதாக தகவல் தெரிவிக்கப்படும். அஞ்சல் வாக்குகளை சேகரிக்க அதற்கென அமைக்கப்பட்ட ஒரு குழு செல்லும். இந்தக் குழுக்களுக்கு போதிய காவல் துறை பாதுகாப்பும் வழங்கப்படும். இந்தக் குழுவில் காவல் துறை அலுவலா்கள், விடியோகிராபா், அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகை செய்தியாளா், வேட்பாளா் அல்லது அவரால் நியமனம் செய்யப்பட்ட முகவா்கள் ஆகியோா் இடம்பெறுவா். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தோ்தலில் தங்களது வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.