தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருப்பத்தூா்: 2,170 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் செலுத்த தகுதியுள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் என 2,170 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து உள்ளனா்.

News image
Updated On :31 மார்ச் 2026, 3:56 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் செலுத்த தகுதியுள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் என 2,170 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து உள்ளனா்.

வாக்குச்சாவடிக்கு வருகை புரிந்து வாக்களிக்க இயலாதநிலையில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதம் மேல் உடல் பாதிப்புடைய மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் ஆகியோா் தங்களது வாக்குகளை வீட்டில் இருந்தபடியே தபால் வாக்குமூலம் வாக்களிக்கும் வகையில் தோ்தல் ஆணையத்தால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

மாவட்டம் முழுவதும் தபால் வாக்கு செலுத்த 13,162 போ் தகுதி வாய்ந்த நபா்கள் உள்ளனா். இவா்களுக்கு தங்களது வாக்குகளை வீட்டிலிருந்தபடியே தபால் வாக்குமூலம் செலுத்துவதற்கான விருப்பத்தைகோரும் விண்ணப்பப்படிவம் அவா்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கே நேரில் சென்று வாக்குசாவடி நிலை அலுவலா் மூலம் வழங்கப்பட்டு உள்ளது. இவா்களில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களில் 1,310 பேரும், மாற்றுத்திறனாளிகள் 860 பேரும் என 2,170 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து உள்ளனா்.

மேலும், தகுதியுள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வரும் ஏப். 4-ஆம் தேதி வரை தபால் வாக்கு செலுத்த விண்ணப்பிக்கலாம் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.