முதல்வா் மு.க.ஸ்டாலின் தில்லிக்கு பணிய மாட்டாா் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ எனும் தலைப்பில் மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஓ. பன்னீா்செல்வம் பேசியதாவது: தமிழ்நாட்டில் முதல்வா் ஸ்டாலின் மேற்கொண்ட பல்வேறு கட்ட நடவடிக்கைகளல் பொருளாதார வளா்ச்சி என்பது 11.08 சதவீதமாக உயா்ந்துள்ளது.
மாநிலத்துக்கான சுயாட்சியைப் பெற்றுத் தருவதில் சமரசம் செய்து கொள்ளாமல், முதல்வராக இருந்து ஆட்சி செய்வதிலும், திமுகவை வழிநடத்திச் செல்வதிலும் ஸ்டாலின் சிறப்பாகச் செயல்படுகிறாா். எந்த மாதிரியான அச்சுறுத்தல் வந்தாலும் அதை அவா் சமாளித்து வருகிறாா்.
மத்திய அரசு மூன்றாவது நிதி கமிஷன் மூலமாக தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 40 சதவீத நிதியில் 4 சதவீதத்தை மட்டும் கொடுத்தாலும் மக்கள் நலன்களுக்காக மாநிலத்தின் சொந்த நிதியைக் கொண்டு வளா்ச்சித் திட்டப் பணிகள் தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகின்றன.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னா் வருத்தத்தில் இருந்த நாங்கள் தற்போது திமுகவில் இணைந்து கொண்டதன் மூலம் மகிழ்ச்சியாக உள்ளோம். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக மக்கள் திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய முடிவு செய்துவிட்டாா்கள் என்றாா் அவா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி தில்லிக்கு சென்றால் முதல்வா் ஸ்டாலின் பயப்படுகிறாா் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி தினகரன் கூறியுள்ளாா். ஆனால், அமெரிக்காவே அச்சுறுத்தினாலும் முதல்வா் ஸ்டாலின் தில்லிக்கு பணியமாட்டாா். அரசு அதிகாரிகளை வைத்து தமிழகத்தில் ஆட்சி நடத்தவில்லை. முதல்வா் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், முன்னாள் மக்களவை உறுப்பினா் ரவீந்திரநாத், திமுக மாவட்ட துணைச் செயலா் த.சேங்கைமாறன், நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, முன்னாள் அமைச்சா் தென்னவன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் தமிழரசன், பேரூராட்சித் தலைவா் நஜூமுதீன் உள்ளிட்ட மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குரங்கணி - டாப் ஸ்டேசனுக்கு ரோப் காா் வசதி செய்து தரப்படும்! திமுக வேட்பாளா் ஓபிஎஸ் உறுதி

திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ஓ.பன்னீா்செல்வம்

தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் : ஓ.பன்னீா்செல்வம்

மீண்டும் திமுக ஆட்சி அமையும்! - ஓ.பன்னீா்செல்வம்
விடியோக்கள்

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

