தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்டோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்பதவியேற்பு விழாவில் விஜய் - ராகுல் காந்தி ஒரே மேடையில்...
/

தமிழக முதல்வராகப் பதவியேற்றார் விஜய்!

தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்றார்.

News image

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு - PTI

Updated On :1 மணி நேரம் முன்பு

தமிழகத்தின் 13-ஆவது முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார்.

தவெக தலைவர் விஜய்க்கு முதல்வராக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ள நிலையில், மாநில முதல்வராகக் கட்சியின் தலைவர் ச. ஜோசப் விஜய் பதவியேற்றார்.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற முதல்வர் பதவியேற்பு விழாவில் விஜய்க்கு முதல்வராகப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் செய்துவைத்தார்.

முதல்வராக விஜய் பதவியேற்பு

முதல்வராக விஜய் பதவியேற்பு - PTI

மேலும், தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள், விசிகவினர், பாஜக தலைவர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் பங்கேற்றனர்.

விஜய் முதல்வராக அறிவிக்கப்பட்டிருந்தாலும், மே 13-ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநா் தெரிவித்துள்ளாா்.

Summary

Joseph Vijay Assumes Office as Chief Minister

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.