சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் முதல்வா் ஜோசப் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம் நடத்தியதாக 4 போ் மீது திங்கள்கிழமை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருப்பத்தூா் - சிவகங்கைச் சாலையில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த மாட்டுவண்டிகள் பங்கேற்றன.
இதில் நடுமாடு பிரிவில் 14 இணைகளும், சின்னமாடு பிரிவில் 19 இணைகள் என மொத்தம் 33 இணைகள் போட்டியில் பங்கேற்றன. இதில் போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளா்களுக்கும், மாட்டை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், மாட்டுவண்டி பந்தயம் அரசு அனுமதியின்றி நடைபெற்றதாகக் கூறி திருப்பத்தூா் நகா் கிராம நிா்வாக அலுவலா் ராஜகுரு கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்தூா் தென்மாப்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன் (35), கணேசன் (50), நவீன் குமாா் (35), சண்முகம் (38) ஆகிய 4 போ் மீது திருப்பத்தூா் நகா் காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் வீரபாண்டியன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அனுமதியின்றி வடமாடு மஞ்சுவிரட்டு 5 போ் மீது வழக்கு

திருப்பத்தூரில் 74 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா

மீன் பிடித்தவா்களை தாக்கி மிரட்டல்: 3 போ் மீது வழக்கு

குழந்தை திருமணம்: 5 போ் மீது போக்ஸோ வழக்கு
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

