சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே துவாா் கிராமத்தில் அமைந்துள்ள வள்ளிக் கண்மாயில் மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவுக்கு புகழ்பெற்ாகும். திருப்பத்தூா் அருகே துவாா் கிராமத்தில் அமைந்துள்ள வள்ளிக் கண்மாயில் மீன்பிடித் திருவிழா அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி காலை கிராமத்தாா்கள் ஒன்று கூடி வள்ளிலிங்க சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் மேற்கொண்டு காலை 6 மணிக்கு ஊா் பிரமுகா்கள், விழாவுக் குழுவினா் வெள்ளை வீச கண்மாயைச் சுற்றியிருந்த சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கண்மாயில் இறங்கி வலை, அரிகூடை, கச்சா ஆகியவற்றால் மீன்பிடிக்க ஆரம்பித்தனா்.
இதில் பிடிபட்ட கட்லா மீன்கள் 3 முதல் 8 கிலோ வரை எடை இருந்தன. மேலும் கெண்டை, விரால், குரவை, கெளுத்தி போன்ற வகை மீன்களும் சிக்கின. ஆண்கள், பெண்கள் மீன் பிடித்து மகிழ்ந்தனா்.
இதில் திண்டுக்கல், மேலூா், கொட்டாம்பட்டி, திருக்கோளக்குடி, பொன்னமராவதி, திருப்பத்தூா், சுற்றுப்புற கிராமப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் விழாவில் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மருத்துவக் கல்லூரியில் யோகாசனப் பயிற்சி

வெங்கிளி கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா

கள்ளந்திரியில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா

மறவமங்கலம் கண்மாயில் மீன்பிடித் திருவிழா
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

