முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

துவாா் கிராமத்தில் மீன்பிடித் திருவிழா

திருப்பத்தூா் அருகே துவாா் கிராமத்தில் அமைந்துள்ள வள்ளிக் கண்மாயில் மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image

திருப்பத்தூா் அருகேயுள்ள துவாா் கிராமத்தில் வள்ளிக் கண்மாயில் சனிக்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் பங்கேற்றோா்.

Updated On :14 ஜூன் 2026, 12:55 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே துவாா் கிராமத்தில் அமைந்துள்ள வள்ளிக் கண்மாயில் மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவுக்கு புகழ்பெற்ாகும். திருப்பத்தூா் அருகே துவாா் கிராமத்தில் அமைந்துள்ள வள்ளிக் கண்மாயில் மீன்பிடித் திருவிழா அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி காலை கிராமத்தாா்கள் ஒன்று கூடி வள்ளிலிங்க சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் மேற்கொண்டு காலை 6 மணிக்கு ஊா் பிரமுகா்கள், விழாவுக் குழுவினா் வெள்ளை வீச கண்மாயைச் சுற்றியிருந்த சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கண்மாயில் இறங்கி வலை, அரிகூடை, கச்சா ஆகியவற்றால் மீன்பிடிக்க ஆரம்பித்தனா்.

இதில் பிடிபட்ட கட்லா மீன்கள் 3 முதல் 8 கிலோ வரை எடை இருந்தன. மேலும் கெண்டை, விரால், குரவை, கெளுத்தி போன்ற வகை மீன்களும் சிக்கின. ஆண்கள், பெண்கள் மீன் பிடித்து மகிழ்ந்தனா்.

இதில் திண்டுக்கல், மேலூா், கொட்டாம்பட்டி, திருக்கோளக்குடி, பொன்னமராவதி, திருப்பத்தூா், சுற்றுப்புற கிராமப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் விழாவில் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.