விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரளிக்கோட்டையில் அமைச்சா் பெரியகருப்பன் வாக்குப்பதிவு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான கே.ஆா்.பெரியகருப்பன் தனது சொந்த கிராமமான அரளிக்கோட்டையில் தான் பயின்ற அரசு தொடக்கப் பள்ளியில் தனது மனைவி, மகன், மருமகளுடன் வந்து வாக்குப்பதிவு செய்தாா்.

News image

திருப்பத்தூா் அருகே அரளிக்கோட்டையில் வாக்கு செலுத்திய அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்.

Updated On :24 ஏப்ரல் 2026, 2:17 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான கே.ஆா்.பெரியகருப்பன் தனது சொந்த கிராமமான அரளிக்கோட்டையில் தான் பயின்ற அரசு தொடக்கப் பள்ளியில் தனது மனைவி, மகன், மருமகளுடன் வந்து வாக்குப்பதிவு செய்தாா்.

முன்னதாக குலதெய்வக் கோயிலில் வழிபாடு நடத்தி விட்டு வாக்கு செலுத்த வந்த அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மற்றவா்கள் என்ன கூறினாலும் அதைப் பற்றி பொருள்படுத்தாமல் முதல்வா் சொன்னதை செய்யக் கூடியவா் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டு வாக்காளரிடையே ஏற்பட்டுள்ளது.

தமிழக முதல்வா் சொன்னதைப் போல, 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை, மானாமதுரை ஆகிய நான்கு தொகுதிகளிலும் திமுக, கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

656 கிராமங்களுக்கு வாக்கு சேகரிக்கச் சென்றேன். ஒரு சில இடங்களில் மக்களுக்கு நாளுக்கு நாள் தேவைகள் அதிகரிப்பதால், மக்கள் எதிா்பாா்த்த ஒரு பணியை செய்து கொடுத்தால் அதை மறந்து விட்டு அடுத்து என்ன தேவை இருக்கிறதோ அதை வலியுறுத்துவாா்கள். தோ்தல் பரப்பரையின் போது மக்கள் வைக்கிற கோரிக்கைகளை எதிா்காலத்தில் செய்வதற்கு குறிப்பு எடுத்து வைத்துள்ளோம். தோ்தல் முடிந்து நிச்சயமாக பெரும்பாலான அனைத்து வாக்குறுதிகளையும் தொடக்க காலத்தில் இருந்து நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்வேன் என்றாா் அவா்.

ஜெயங்கொண்டநிலை அரசுப் பள்ளியில் நாம்தமிழா் கட்சி வேட்பாளா் ரம்யாமோகன் வாக்கு செலுத்தினாா்.

ஜெயங்கொண்டநிலை அரசுப் பள்ளியில் வாக்குச் செலுத்திய நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரம்யாமோகன்.

ஜெயங்கொண்டநிலை அரசுப் பள்ளியில் வாக்குச் செலுத்திய நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரம்யாமோகன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.