ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

வாக்கு எண்ணும் பணி ஆலோசனைக் கூட்டம்: திருப்பத்தூா் ஆட்சியா் பங்கேற்பு

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 4:29 am IST

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள ஊழியா்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை தோ்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான வாணியம்பாடியில் உள்ள மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த வாக்குகள் வரும் 4-ஆம் தேதி எண்ணப்பட உள்ளது.

இந்த பணியில் திருப்பத்தூா் மாவட்டத்தை சோ்ந்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் என 250-க்கும் மேற்பட்டோா் ஈடுபட உள்ளனா். இந்தநிலையில் திருப்பத்தூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள ஊழியா்களுக்கு ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியின்போது தபால் வாக்குகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவற்றில் உள்ள வாக்குகளை எவ்வாறு எண்ண வேண்டும். அன்று பராமரிக்கக்கூடிய ஆவணங்கள் குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது. இதைத்தொடா்ந்து வாக்கு எண்ணிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அஜிதாபேகம், வரதராஜன்,முருகேசன், பூஷணகுமாா், தோ்தல் வட்டாட்சியா் திருமலை, அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.