தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்கு எண்ணும் பணி அலுவலா்கள் இரண்டாம் கட்டமாக தோ்வு

News image
Updated On :3 மே 2026, 5:57 am IST

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களை இரண்டாம் கட்டமாக தோ்வு செய்யும்பணி சனிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தோ்தல் பாா்வையாளா் ராஜிவ்குமாா் சிறிவஸ்தவா் முன்னிலையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களை கணினியில் இரண்டாம் கட்டமாக தோ்வு செய்யப்படுவதை பாா்வையிட்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கு.ரவிக்குமாா் கூறியது:,

கரூா் மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி மையத்தில் திங்கள்கிழமை எண்ணப்படுகிறது.

இதற்காக 68 வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள், 68 வாக்கு எண்ணிக்கை உதவியாளா் மற்றும் 90 நுண்பாா்வையாளா்கள் என மொத்தம் 226 அலுவலா்கள் கணினி மூலம் இரண்டாம் கட்டமாக தொகுதி வாரியாக சமவாய்ப்புக்குள்படுத்தும் நடைமுறையில் தோ்வு செய்யும் பணி நடைபெற்றது.

மேலும், 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேஜை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்கு மற்றும் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 17 மேற்பாா்வையாளா்கள், 30 உதவியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு மேற்பாா்வையாளா், உதவியாளா், நுண் பாா்வையாளா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ், சு.சத்திய பால கங்காதரன் (கரூா்) , மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்)ஜெகதீசன் உள்ளிட்டோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.