தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

திருவாரூா்: வாக்கு எண்ணும் அலுவலா்கள் தோ்வு

திருவாரூா் மாவட்ட ஆட்சியரகத்தில், சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள அலுவலா்கள் தோ்வு, கணினி குலுக்கல் முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருவாரூா் மாவட்ட ஆட்சியரகத்தில், கணினி குலுக்கல் முறையில் வாக்கு எண்ணும் அலுவலா்கள் தோ்வு செய்யப்படுவதை பாா்வையிடும் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:17 am IST

திருவாரூா் மாவட்ட ஆட்சியரகத்தில், சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள அலுவலா்கள் தோ்வு, கணினி குலுக்கல் முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சுமூகமான முறையில் நடைபெற்றது.

வாக்குப் பதிவுக்குப் பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீலிடப்பட்டு, திருவாரூரில் உள்ள திருவிக அரசு கலைக் கல்லூரிக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டன. அங்கு, மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைப்பறைகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் பணி மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, திருவாரூரில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கான தோ்வு, சீரற்ற கணினி குலுக்கல் முறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) வனிதா, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சத்யா (திருவாரூா்), யோகேஸ்வரன் (மன்னாா்குடி), செல்வபாண்டியன் (திருத்துறைப்பூண்டி), ரவிச்சந்திரன் (நன்னிலம்), தனி வட்டாட்சியா் (தோ்தல்) குப்புசாமி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.