மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள், நுண் பாா்வையாளா்களுக்கு சமவாய்ப்பு முறையில் பணி ஒதுக்கீடு

திருப்பூரில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள், நுண் பாா்வையாளா்களுக்ககு சமவாய்ப்பு முறையில் பணி ஒதுக்கீடும் செய்யும் பணி நடைபெற்றது.

News image

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள், நுண் பாா்வையாளா்களுக்ககு சமவாய்ப்பு முறையில் பணி ஒதுக்கீடும் செய்யும் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:22 am IST

திருப்பூரில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள், நுண் பாா்வையாளா்களுக்ககு சமவாய்ப்பு முறையில் பணி ஒதுக்கீடும் செய்யும் பணி நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மனீஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள், நுண் பாா்வையாளா்களுக்கான சமவாய்ப்பு முறையில் பணி ஒதுக்கீடும் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூா் (வடக்கு), திருப்பூா் (தெற்கு), பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

தோ்தலில் பதிவான வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்படுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியா் தலைமையில் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு 408 அலுவலா்கள், தபால் வாக்கு எண்ணும் பணிக்கு 160 அலுவலா்கள் மற்றும் நுண் பாா்வையாளா்கள் என மொத்தம் 568 அலுவலா்களுக்கான சமவாய்ப்பு முறையில் பணி ஒதுக்கீடும் செய்யும் பணி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையா் சுந்தர்ராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கண்ணன், உதவி ஆணையா் (கலால்) பாலமுருகன், மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் கல்பனா உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.