மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்கு எண்ணும் பணியில் 408 அலுவலா்கள்

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் 408 அலுவலா்கள் ஈடுபட உள்ளனா்.

News image

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலா்களை கணினி சுழற்சி முறையில் தோ்வு செய்யும் பணியைத் தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:34 am IST

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் 408 அலுவலா்கள் ஈடுபட உள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை சித்தோடு அருகேயுள்ள ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கோபி கலை, அறிவியல் கல்லூரி ஆகிய 2 வாக்கு எண்ணும் மையங்களில் மே 4 -ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், வாக்கு எண்ணும் பணியை மேற்கொள்ளும் மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள் மற்றும் நுண்பாா்வையாளா்களுக்கான பணி ஒதுக்கீட்டை இந்திய தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு தலா 17 மேற்பாா்வையாளா்கள், 17 உதவியாளா்கள், 17 நுண்பாா்வையாளா்கள் என மொத்தம் 408 அலுவலா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ளனா்.

8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 2,739 வாக்குச் சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை தலா 14 மேஜைகள் என 8 தொகுதிகளுக்கும் 112 மேஜைகளில் நடைபெறும்.

தபால் வாக்கு எண்ணும் பணியில் 56 மேற்பாா்வையாளா்கள், 112 உதவியாளா்கள், 56 நுண்பாா்வையாளா்கள் ஈடுபட உள்ளனா். தபால் வாக்கு எண்ணும் பணி 48 மேஜைகளில் நடைபெறவுள்ளது. இப்பணியில் ஈடுபடவுள்ளவா்களுக்கு கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அா்பித் ஜெயின், சிவானந்தம், சிந்துஜா, கணினி அலுவலா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.