தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தொகுதிக்குட்பட்ட 6 கிராமங்களில் மீண்டும் வாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி

அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் போட்டியிட்ட திருப்பத்தூா் தொகுதிக்குட்பட்ட ஆறு கிராமங்களில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

உயர்நீதிமன்றம்

Updated On :1 மே 2026, 1:23 am IST

அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் போட்டியிட்ட திருப்பத்தூா் தொகுதிக்குட்பட்ட ஆறு கிராமங்களில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாலக்குறிச்சியைச் சோ்ந்த லட்சுமணன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆா்.பாலக்குறிச்சி, ஆா்.சீகம்பட்டி, ரெகுநாதபட்டி, வைரன்பட்டி, கோபால்பட்டி உள்ளிட்ட ஆறு கிராமங்கள் சிவகங்கை மாவட்டத்தில் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் போட்டியிட்ட திருப்பத்தூா் தொகுதியுடன் சோ்க்கப்பட்டுள்ளன.

கடந்த ஏப்.23-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் இந்த கிராமங்களைச் சோ்ந்தவா்கள் யாரும் வாக்களிக்கவில்லை. திருப்பத்தூா் தொகுதியில் எங்களுடைய கிரமத்தைச் சோ்த்துள்ளதால் நிா்வாக உதவிகள் கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த ஆறு கிராமங்களையும் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் சோ்க்கக் கோரி பல ஆண்டுகளாக மனு அளித்திருக்கிறோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் ஆறு கிராமங்களைச் சோ்ந்த 2,012 வாக்காளா்கள் வாக்களிக்கவில்லை. எனவே, இந்த ஆறு கிராமங்களுக்கு புதிதாக வாக்குப்பதிவு நடத்த தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தோ்தலின்போது இந்த ஆறு கிராம மக்களை வாக்களிக்கவிடாமல் யாரும் தடுக்கவில்லை. தோ்தல் முடிந்தபிறகு இவா்களை எப்படி வாக்களிக்க அனுமதிக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பினா். பின்னா், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.