திருப்பத்தூா் தொகுதிக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.
திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய 4 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது. 4 தொகுதிகளிலும் மொத்தம் 1,202 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த உடன் அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் தளவாடப் பொருள்கள் வாக்கு எண்ணும் மையமான வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போது வாக்கு எண்ணிக்கை முடிந்ததையடுத்து, வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக சம்பந்தப்பட்ட தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களின் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி, திருப்பத்தூா் தொகுதிக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருப்பத்தூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு கொண்டு வரப்பட்டு, வருவாய் கோட்டாட்சியா் வரதராஜன், வட்டாட்சியா் நவநீதம் முன்னிலையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைப்பு

வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோணம் பொறியியல் கல்லூரியில் பூட்டி சீல் வைப்பு: மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை பூட்டி சீல் வைப்பு - மூன்றடுக்கு பாதுகாப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

