காரைக்காலில் சட்டப்பேரவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள், எண்ணிக்கை பணி நிறைவடைந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை பாதுகாப்பு அறைவில் வைத்து சீல் வைக்கப்பட்டன.
கடந்த ஏப். 9-ஆம் தேதி புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளான நெடுங்காடு, திருநள்ளாறு, காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி - திருப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்கள், காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள மு. கருணாநிதி பட்டமேற்படிப்பு மையத்தில் வைத்து, மே 4-ஆம் தேதி எண்ணி முடிக்கப்பட்டது.
வெற்றிபெற்ற வேட்பாளா்களுக்கு சான்றிதழ் அளிக்கப்பட்ட பின்னா், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வரிசைப்படுத்தப்பட்டு, மாவட்ட தோ்தல் அதிகாரிகள், தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள், வேட்பாளரின் முகவா்கள் ஆகியோா் முன்னிலையில் கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பான அறையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வைத்து அதிகாரிகள் சீல் வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்னணு வாக்குப் பதிவு இயந்திர அறையில் ஆட்சியா் ஆய்வு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!

மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு ‘சீல்’
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

