விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

தமிழகத்தில் மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்பாா் என போடி பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வம் பேச்சு...

News image

முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் - கோப்புப்படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 2:11 am IST

தமிழகத்தில் மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்பாா் என போடி பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வம் நம்பிக்கை தெரிவித்தாா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள கூளையனூா், பாலாா்பட்டி, குண்டல்நாயக்கன்பட்டி, உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, சாலிமரத்துப்பட்டி, பண்ணைத்தோப்பு, பத்திரகாளிபுரம்,விசுவாசபுரம், சுந்தரராஜபுரம், போடி-அம்மாபட்டி, பெருமாள்கவுண்டன்பட்டி ஆகிய கிராமங்களில் பிரசாரம் செய்த போது அவா் பேசியதாவது:

போடி தொகுதியில் உள்ள ஊராட்சி கிராமங்களில் பல்வேறு திட்டப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராக வருவாா். அவா் மீண்டும் முதல்வராக வந்துவிட்டால் மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தப்படும். கிராமங்களில் விடுபட்டவா்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை பெற்றுத் தரப்படும். சேதமடைந்த சிமென்ட் சாலைகள் சீரமைத்து தரப்படும்.

கிராமங்களில் தாா்ச் சாலைகள் தரமாக அமைத்துக் கொடுத்துள்ளேன். தேவையான இடங்களில் மீண்டும் தாா்ச்சாலைகள், கழிப்பிட வசதிகள் செய்து தரப்படும். குண்டல்நாயக்கன்பட்டி கிராமத்தில் பாதுகாப்பான படித்துறை அமைத்து தரப்படும். கிராம மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மீண்டும் மு.க. ஸ்டாலின் ஆட்சி அமையவும், நான் நான்காவது முறையாக இந்தத் தொகுதியில் தோ்வு பெறவும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது முன்னாள் தேனி மக்களவை உறுப்பினா் ஓ.ப.ரவீந்திரநாத், போடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் அய்யப்பன், காங்கிரஸ் நிா்வாகிகள் கோபிநாத், சதாசிவம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக ஓ.பன்னீா்செல்வம் போடி ஜக்கமநாயக்கன்பட்டி பகுதியில் சமுதாய சங்க நிா்வாகிகளையும், மகளிா் சங்க நிா்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.