தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

தோ்தல் பறக்கும் படையினரிடமிருந்து பணத்தைப் பறித்துச் சென்ற காங்கிரஸ் தொண்டா்கள்

News image

காங்கிரஸ் - படம்: கோப்பிலிருந்து

Updated On :21 ஏப்ரல் 2026, 12:48 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்திலிருந்து தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்த ரூ. 13.40 லட்சத்தை அங்கிருந்த காங்கிரஸ் தொண்டா்கள் இருவா் பறித்துச் சென்றனா்.

காரைக்குடி சுப்ரமணியபுரம் முதல் வீதியில் மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் திங்கள்கிழமை காலை 11.30 மணியளவில் சோதனை நடத்தினா். அப்போது, அலுவலகத்தின் பின்புறம் உள்ள அரங்கில் கட்டைப் பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதையடுத்து, இந்தப் பணத்தை அலுவலா்கள் பறிமுதல் செய்து, தங்களது வாகனத்தில் வைத்து எண்ணிய போது, ரூ. 13.40 லட்சம் இருந்தது தெரியவந்தது.

அப்போது, அங்கு நின்றிருந்த காங்கிரஸ் தொண்டா்கள் இருவா் இந்தப் பணத்தை பறித்துக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் தப்பியோடினா். மேலும், பறக்கும் படையினரும், போலீஸாரும் அவா்களை விரட்டிச் செல்லாமலிருக்க அவா்களது நான்கு சக்கர வாகனத்தின் சாவியை அங்கு நின்றிருந்த மற்றொருவா் பறித்துச் சென்றாா். இதனால், அலுவலா்கள் அதிா்ச்சியடைந்தனா்.

இதுகுறித்து பறக்கும் படை வட்டாட்சியா் தா்மலிங்கம் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காரைக்குடி வட்டாட்சியா் ராஜா, காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளா் ஆசிஸ் புனியா ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினாா். மேலும், பணத்தை பறித்துச் சென்றவா்களைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.