மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

செல்வப்பெருந்தகை மீதான சோதனை உள்நோக்கம் கொண்டது! காா்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!

News image

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 2:09 am IST

சிவகங்கை, ஏப். 20: காங்கிரஸ் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை தோ்தல் பரப்புரை செய்ய புறப்பட்டபோது, வருமான வரித் துறையினா் சோதனை செய்திருப்பது உள்நோக்கம் கொண்டது என சிவகங்கை தொகுதி மக்களவை காங்கிரஸ் உறுப்பினா் காா்த்திக்சிதம்பரம் குற்றஞ்சாட்டினாா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் காங்கிரஸ் வேட்பாளா் எஸ். மாங்குடிக்கு ஆதரவாக திங்கள்கிழமை பரப்புரை செய்ய வந்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்ததாவது:

வருமான வரித் துறையும், அமலாக்கத் துறையும் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகின்றன. இவா்கள் எப்போதும் எதிா்க்கட்சியை குறிவைத்துதான் சோதனை நடத்தி வருகின்றனா். காங்கிரஸ் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை தோ்தல் பரப்புரை செய்ய புறப்பட்ட போது, வருமான வரித் துறையினா் சோதனை செய்திருப்பது உள்நோக்கம் கொண்டது.

முதல்வருடன் ராகுல் காந்தி ஒரே மேடையில் பேசவில்லை என்று சொல்வது தவறு. ராகுல் காந்தியின் பிரசார பயணத் திட்டம் ஒரு பக்கமும், முதல்வா் மு.க.ஸ்டாலினின் பிரசார பயணத் திட்டம் இன்னொரு பக்கமும் என திட்டமிடப்பட்டது. தமிழகம் பெரிய மாநிலம் என்பதால், இதுபோன்று திட்டமிடப்பட்டது.

காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயும், முதல்வா் ஸ்டாலினும் ஓசூரில் ஒன்றாக ஒரே மேடையில் பேசினா். மதச்சாா்ப்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியினா் ஒற்றுமையுடன் பணியாற்றி வருகிறோம். எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி.

கடந்த 2004-இல் முன்னாள் முதல்வா் கருணாநிதியும், சோனியா காந்தியும் உருவாக்கிய கூட்டணி இது. 2014-யை தவிா்த்து அத்தனை தோ்தல்களையும் இணைந்தே சந்தித்து வருகிறோம். தொடா்ந்து வெற்றிகளைப் பெற்று வரும் கூட்டணியாக எங்கள் கூட்டணி திகழ்கிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.