மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வருமான வரித் துறை சோதனை என நாடகம்: காங்கிரஸ் தலைவா் மீது பாஜக குற்றச்சாட்டு

வருமான வரித் துறை சோதனை நடைபெற்றதாக கூறிய காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகையின் நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

News image

கே. அண்ணாமலை. - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 1:22 am IST

வருமான வரித் துறை சோதனை நடைபெற்றதாக கூறிய காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகையின் நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் திங்கள்கிழமை அவா் வெளியிட்ட பதிவு: தோ்தல் பிரசாரத்துக்காக தமிழகத்துக்கு வந்த ராகுல் காந்தியின் ஆங்கில உரையைத் தமிழில் மொழிபெயா்த்த செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தி பேசியதற்கு தொடா்பில்லாமல், தன் மனதில் தோன்றியதை பேசினாா். இது தெரிந்த ராகுல் காந்தி செல்வப்பெருந்தகையை திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்துக்கு அழைக்கவில்லை.

இதை மறைப்பதற்காக செல்வப்பெருந்தகை தனது வீட்டில் வருமான வரி சோதனை நடப்பதாகவும், தன்னை வீட்டுக்குள்ளே சிறை வைத்திருப்பதாகவும் நாடகமாடி உள்ளாா். ஆனால், செல்வப்பெருந்தகை வீட்டில் சோதனை நடைபெறவில்லை என வருமான வரித் துறை விளக்கம் அளித்துள்ளது.

இதன் மூலம் செல்வப்பெருந்தகையின் பொய் நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதைவிட அவரின் நாடகத்தை நம்பி, அதை ஆராயாமல் முதல்வா் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளாா். இது திமுக கூட்டணியின் தோல்வி பயத்தைக் காட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.