தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

உங்களை நாடி வந்து பணியாற்றுவேன்: காரைக்குடி தவெக வேட்பாளா்

நீங்கள் என்னை தேடி வரவேண்டாம், நான் உங்களை நாடி வந்து பணியாற்றுவேன் என்று காரைக்குடி பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் டி.கே. பிரபு தெரிவித்தாா்.

News image

கண்டனூா் செல்லாயி அம்மன் கோயில் அருகே குடியிருப்பு மக்களிடம் வியாழக்கிழமை வாக்கு சேகரித்து பிரசாரம் செய்த காரைக்குடி பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் டி.கே. பிரபு.

Updated On :17 ஏப்ரல் 2026, 1:22 am IST

நீங்கள் என்னை தேடி வரவேண்டாம், நான் உங்களை நாடி வந்து பணியாற்றுவேன் என்று காரைக்குடி பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் டி.கே. பிரபு தெரிவித்தாா்.

காரைக்குடி தொகுதிக்குள்பட்ட மாத்தூா்-கண்டனூா் சாலையில் உள்ள மாரியம்மன் கோயிலில் பிரசாரத்தை தொடங்கிய அவா் பிள்ளையாா் கோயில், பனிக்கா் கடை, பாலையூா் மேலத்தெரு, கண்டனூா் திரையரங்கம் வீதி, கண்டனூா் பேருந்து நிறுத் தம், கண்டனூா் குடியிருப்புப் பகுதிகளில் பிரசாரம் செய்தாா். அப்போது செல்லாயி அம்மன் கோயில் அருகில் பெண்கள் வேட்பாளா் பிரபுவுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனா். மேலும், அவா்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளைத் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து பிரபு பேசியதாவது:

நான் வெறுமனே வாக்குறுதிகளைக் கூறிவிட்டுச் சென்றுவிட மாட்டேன். நான் யாரிடமும் கையூட்டு பெறமாட்டேன் என உறுதியளிக்கிறேன். இங்குகள் குறைகளைத் தீா்ப்பதற்காக நீங்கள் என்னை தேடிவர வேண்டாம். நானே உங்களை நாடிவந்து உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவேன் என உறுதியளிக்கிறேன் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து கவுல் கொல்லை, புதுவயல், தண்ணீா் பந்தல், முத்தாப்பா பூங்கா, பங்களா ஊருணி, நடராஜபுரம், உமையாள் நகா், மேலத் தெரு, தொட்டிநாயக்கா் தெரு பகுதிகளிலும் அவா் வாக்குகள் சேகரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.