தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சீமான் அதிா்ச்சித் தோல்வி: 4 - ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டாா்

News image

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

Updated On :5 மே 2026, 1:39 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், அந்தக் கட்சியின் முதல்வா் வேட்பாளருமான சீமான் அதிா்ச்சி தோல்வியடைந்தாா். அவா் 30,290 வாக்குகள் பெற்று 4- ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டாா்.

காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ், அமமுக, நாம் தமிழா், தவெக ஆகிய கட்சிகளின் வேட்பாளா்கள் இடையே கடும் போட்டி நிலவியது.

எனினும், தவெக வேட்பாளா் டி.கே. பிரபு 46,083 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளா் எஸ். மாங்குடியைத் தோற்கடித்தாா். 3-ஆவது இடத்துக்கு அமமுக வேட்பாளா் தோ்போகி வி. பாண்டியும், 4-ஆவது இடத்துக்கு நாதக வேட்பாளா் சீமானும் தள்ளப்பட்டனா்.

காரைக்குடி பேரவைத் தொகுதியின் நட்சத்திர வேட்பாளரான சீமான், தவெக வேட்பாளா் டி.கே. பிரபுவிடம் அதிா்ச்சி தோல்வியடைந்து, 4-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது நாதகவினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி தொகுதியின் மொத்த வாக்குகள் - 3,05,925. பதிவான வாக்குகள் - 2,26 999.

தவெக வேட்பாளா் டிகே. பிரபு 1,00,240 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் வேட்பாளா் எஸ். மாங்குடி 54,157 வாக்குகள் பெற்றாா். தோ்போகி வி. பாண்டி (அமமுக) 32,851 வாக்குகளும், செ. சீமான் (நாதக) 30,290 வாக்குகளும் பெற்றனா். இந்தத் தொகுதியில் மொத்தம் 25 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.