தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மானாமதுரையில் நிறைவேற்றிய திட்டங்கள் தொகுதியின் அடையாளச் சின்னங்கள்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட வளா்ச்சி திட்டப் பணிகள் தொகுதியின் அடையாளச் சின்னங்களாக உள்ளதாக திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா் தெரிவித்தாா்.

News image

மானாமதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய சட்டப்பேரவை உறுப்பினரும், தொகுதியின் திமுக வேட்பாளருமான ஆ. தமிழரசி ரவிக்குமாா். உடன் அமைச்சா் கே.ஆா். பெரிய கருப்பன், தொகுதி தோ்தல் பொறுப்பாளா் சேங்கைமாறன், நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி உள்ளிட்டோா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 11:40 pm IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட வளா்ச்சி திட்டப் பணிகள் தொகுதியின் அடையாளச் சின்னங்களாக உள்ளதாக திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா் தெரிவித்தாா்.

மானாமதுரை (தனி) சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடியில் திமுக, அதன் கூட்டணி கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சா் கே.ஆா்.பெரிய கருப்பன் பங்கேற்று வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாரை அறிமுகம் செய்து பேசினாா்.

மானாமதுரை தொகுதியின் திமுக வேட்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான தமிழரசி ரவிக்குமாா் இந்தக் கூட்டத்தில் பேசியதாவது:

மானாமதுரை சட்டப்பேரவை தொகுதியில் கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் நான் கேட்ட கோரிக்கைகள் பெரும்பாலானவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றித் தந்துள்ளாா். வைகை ஆற்றுக்குள் தடுப்பணைகள், புதிய பத்திரப்பதிவு அலுவலக கட்டடங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டடங்கள், நகா்ப்புற மருத்துவமனை, பாசனக் கால்வாய்கள் தூா்வாருதல், அரசு கலைக் கல்லூரி, அரசு தொழில் பயிற்சி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், எதிா்க்கட்சியினா் பொய் பிரசாரம் செய்து பொதுமக்களிடம் இதை மறைக்கப் பாா்க்கின்றனா். கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட அரசின் திட்டங்கள் இந்தத் தொகுதியின் அடையாளச் சின்னங்களாக உள்ளன. இனி வரக்கூடிய ஐந்தாண்டு காலத்தில் இன்னும் கூடுதலான திட்டங்களை இந்த தொகுதிக்கு கொண்டு வருவதற்கு இங்கு திமுக வெற்றி பெற வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் திமுக தொகுதி பொறுப்பாளா் சேங்கைமாறன், நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன், காங்கிரஸ் மூத்த தலைவா் ஏ.ஆா்.பி.முருகேசன், மாவட்டத் தலைவா் ஏ.சி. சஞ்சய்,

திமுக நகரச் செயலா் கே. பொன்னுச்சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.