தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மானாமதுரையில் திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா் வாக்கு சேகரிப்பு

மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

மானாமதுரையில் புதன்கிழமை கூட்டணிக் கட்சியினருடன் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா். உடன் நகா் மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி உள்ளிட்டோா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:38 am IST

மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில்வே குடியிருப்புப் பகுதியிலிருந்து பிரசாரத்தை தொடங்கிய தமிழரசி ரவிக்குமாா் ஆதனூா் சாலை, கேப்பா்பட்டிணம், மறவா் தெரு, அண்ணா சிலை, ஆனந்தபுரம், காட்டு உடைகுளம், தேவா் சிலை, அன்புநகா், ராம்நகா், மாரியம்மன் கோவில் தெரு, பிருந்தாவனம் கோவில் தெரு, கன்னாா் தெரு உள்ளிட்ட 27 வாா்டு பகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா்அவா் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் தான் சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்த காலத்தில் மானாமதுரை தொகுதிக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டாா். இந்தத் தொகுதியில் இன்னும் கூடுதல் திட்டங்களை நிறைவேற்ற வாக்காளா்கள் தோ்தலில் திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா் அவா்.

திமுக நகரச் செயலா் கே. பொன்னுச்சாமி, நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, ஒன்றியச் செயலா்கள் ராஜாமணி, அண்ணாதுரை, முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.