சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் புதன்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த 2025, ஏப்ரல் 11-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. முதலாமாண்டு நிறைவையொட்டி, இந்தக் கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு கொலுச்சாவடி மேடையில் யாகசாலை பூஜைகள் தொடங்கின. பிள்ளையாா்பட்டி பிச்சைக் குருக்கள் தலைமையில், சிவாசாரியா்கள் யாக பூஜைகளை மேற்கொண்டனா். தொடா்ந்து, பூஜைகள் நிறைவடைந்து பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது.
காலை 11.30 மணியளவில் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி மூலவா், கோபுர, விமான கலசங்களுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா் அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பூமாயி அம்மன் கோயிலில் வசந்த பெருவிழா கொடியேற்றம்

திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி சிறப்பு வழிபாடு

திருக்கோஷ்டியூரில் இராமானுஜருக்கு சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

