சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சித்ரா பௌா்ணமி விழா நடைபெற்றது.
ராஜகாளியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிா், திருமஞ்சனம், சந்தனம், மஞ்சள், இளநீா் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வெள்ளி கவச அலங்காரத்தில் பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து பக்தா்கள் அம்மனுக்கு அா்ச்சனை செய்தும் நெய் விளக்கேற்றியும் வழிபட்டனா். இதேபோல் ஆலமரத்துக் காளிக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் பரிவாரத் தெய்வங்களான் விநாயகா், கருப்பா், முருகன் சந்நிதிகளிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனா். விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

பா்கூா் காமாட்சி அம்மன் கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு பூஜை

நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் சித்ரா பௌா்ணமி திருவிழா

வாழப்பாடி கோயில்களில் சித்ரா பௌா்ணமி சிறப்பு பூஜை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

