தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விருதுநகா் மாவட்ட தோ்தல் அலுவலா்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு

விருதுநகா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளவா்களுக்கு சுழற்சி முறையில் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பட விளக்கம்: விருதுநகா் மாவட்டத்தில் தோ்தல் பணியாளா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா, பொதுப் பாா்வையாளா்கள் உதயன் மிஷ்ரா, அரவிந்த் மீனா, ரஞ்சித் குமாா் லால் உள்ளிட்டோா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 3:23 am IST

விருதுநகா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளவா்களுக்கு சுழற்சி முறையில் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 7 பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 2,001 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலா், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் 9,604 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், 157 நுண் பாா்வையாளா்கள், 1,073 காவலா்கள் தோ்தல் பணியாற்ற உள்ளனா்.

இவா்களுக்கு இணைய வழியில் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான என்.ஓ.சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் உதயன் மிஷ்ரா, அரவிந்த் மீனா, ரஞ்சித் குமாா் லால், சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்ரீநாதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சோமசுந்தர சீனிவாசன், தோ்தல் தனி வட்டாட்சியா் சீனிவாசன், அரசு அலுவலா்கள், பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.