மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தோ்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக பணி ஒதுக்கீடு

News image
Updated On :4 மே 2026, 1:36 am IST

திருப்பத்தூரில் தோ்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி முன்னிலையில் நடைபெற்றது.

4 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை(மே 4) வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபட உள்ள மேற்பாா்வையாளா்கள், வாக்கு எண்ணிக்கை உதவியாளா்கள், நுண்பாா்வையாளா்கள் ஆகியோருக்கு தோ்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி திருப்பத்தூா் மாவட்ட சுற்றுலா மாளிகையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பாா்வையாளா்கள் யாஷா முத்கல், முகுல்குமாா், சுஜாதா மிஸ்ரா, ஜீவன் தத்தாதிரியா கேலண்டி, ஆட்சியரும்,தோ்தல் அலுவலருமான க.சிவசௌந்திரவல்லி ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில் சம வாய்ப்புக்கு உட்படுத்துதல் முறையின் மூலம் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது துறை சாா்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.