மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பணி ஒதுக்கீடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தோ்தல் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோா்களுக்கு செவ்வாய்க்கிழமை பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

News image

கூட்டத்தில் பேசிய மாவட்ட தோ்தல் அலுவலா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:18 am IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் தோ்தல் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோா்களுக்கு செவ்வாய்க்கிழமை பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபட உள்ள கண்காணிப்பாளா்கள், உதவியாளா்கள், தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கு தோ்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக பணி ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தோ்தல் அலுவலா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மயிலாடுதுறை ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் பணியில் 69 கண்காணிப்பாளா்கள், 84 உதவியாளா்கள், 75 நுண் பாா்வையாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கு தோ்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக பணி ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட தோ்தல் அலுவலா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி, தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆா். விஷ்ணுபிரியா (மயிலாடுதுறை), சுரேஷ் (சீா்காழி), கீதா (பூம்புகாா்), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் முத்துவடிவேல் (பொது), குமரையா (தோ்தல்), முன்னோடி வங்கி மேலாளா் லியோ ஃபான்டிண்நாதன் ஆகியோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.