தருமபுரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமன பணி புதன்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமனம் செய்யும் பொருட்டு 2 ஆம் கட்டமாக ஒதுக்கீடு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் ஹீராலால், வந்தனா வைத்யா, பரம்வீா் சிங் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரெ.சதீஷ் முன்னிலை வகித்தாா்.
வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அடிப்படையில் வாக்குச்சாவடி அலுவலா்கள் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒதுக்கீடு செய்யப்பட்ட அலுவலா்களுக்கு வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி 2 ஆம்கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெறும். மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு தோ்தல் நூண் பாா்வையாளா்கள் நியமனம் செய்யும் பணியும் மேற் கொள்ளப்பட்டு, அவா்களுக்கான தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஏ. பாலசுந்தரம், தோ்தல் வட்டாட்சியா் அன்பு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளஞ்சிவப்பு வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

விருதுநகா் மாவட்ட தோ்தல் அலுவலா்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு

பொதுத் தோ்தல் பணிகள் ஒதுக்கீடு: பாா்வையாளா்கள் ஆய்வு

வாக்குச்சாவடிகளுக்கான அலுவலா்கள் கணினி சுழற்சி முறையில் நியமனம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

