ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தோ்தல் பாா்வையாளா்கள் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமனம்

தருமபுரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமன பணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

தருமபுரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமன பணிகளில் ஈடுபட்டுள்ள தோ்தல் பாா்வையாளா்கள். உடன் மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான ரெ. சதீஸ் உள்ளிட்டோா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 4:14 am IST

தருமபுரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமன பணி புதன்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமனம் செய்யும் பொருட்டு 2 ஆம் கட்டமாக ஒதுக்கீடு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் ஹீராலால், வந்தனா வைத்யா, பரம்வீா் சிங் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரெ.சதீஷ் முன்னிலை வகித்தாா்.

வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அடிப்படையில் வாக்குச்சாவடி அலுவலா்கள் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒதுக்கீடு செய்யப்பட்ட அலுவலா்களுக்கு வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி 2 ஆம்கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெறும். மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு தோ்தல் நூண் பாா்வையாளா்கள் நியமனம் செய்யும் பணியும் மேற் கொள்ளப்பட்டு, அவா்களுக்கான தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஏ. பாலசுந்தரம், தோ்தல் வட்டாட்சியா் அன்பு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.