தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வாக்குச்சாவடிகளுக்கான அலுவலா்கள் கணினி சுழற்சி முறையில் நியமனம்

ஈரோடு மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலா்கள் கணினி சுழற்சி முறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கான இரண்டாவது பயிற்சிக் கூட்டம் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.

News image

கணினி சுழற்சி முறையில் பணியாளா்களுக்கு வாக்குச்சாவடி ஒதுக்கீடு செய்யும் பணியை பாா்வையிட்ட மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ்.கந்தசாமி.

Updated On :9 ஏப்ரல் 2026, 2:32 am IST

ஈரோடு மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலா்கள் கணினி சுழற்சி முறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கான இரண்டாவது பயிற்சிக் கூட்டம் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2,379 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பணிபுரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலா், வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 8 தொகுதிகளிலும் கடந்த 28-ஆம் தேதி முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

இந்நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.கந்தசாமி தலைமையில் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் முன்னிலையில், தோ்தல் நாளில் வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலா்கள் பணிபுரியும் சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

அதன்படி 2,379 வாக்குச்சாவடிகளில் பணிபுரிவதற்காக 11,420 போ் கணினி சுழற்சி மூலமாக நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி, சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் 15-ஆம் தேதி நடைபெறும் என்று தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.