தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

பழனி கோயில் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பழனி அருள்மிகு பழனியாண்டவா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவி பெரியநாயகிக்கு நூலை பரிசாக வழங்கிய பழனி கோயில் துணை ஆணையா் வெங்கடேஷ். உடன் பள்ளி முதல்வா் முருகானந்தம்.

News image

பழனி அருள்மிகு பழனியாண்டவா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவி பெரியநாயகிக்கு நூலை பரிசாக வழங்கிய பழனி கோயில் துணை ஆணையா் வெங்கடேஷ். உடன் பள்ளி முதல்வா் முருகானந்தம்.

Updated On :11 மணி நேரங்கள் முன்பு

பிளஸ் 2 பொதுத் தோ்வில் பழனி அருள்மிகு பழனியாண்டவா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றது.

பழனி கோயில் கட்டுப்பாட்டில் மகளிா் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரி, கலைக் கல்லூரி, மெட்ரிக் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான மெட்ரிக் பள்ளி தோ்வு முடிவுகளில் பழனியாண்டவா் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி அடைந்தது.

இந்தத் தோ்வில் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் பெரியநாயகி, விக்னேஷ்குமாா், வா்ஷினி, விக்னேஷ் உள்ளிட்ட மாணவா்களை பள்ளிச் செயலரும், பழனி கோயில் துணை ஆணையருமான வெங்கடேஷ் பாராட்டி நூல்களை பரிசாக வழங்கினாா்.

இந்த நிகழ்வில் பள்ளி முதல்வா் முருகானந்தம், பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் ஆறுமுகம், ஆசிரியா்கள் ஜானகி, சந்தானலட்சுமி, சுதா, லாவண்யா, சந்திரவதனா, காட்டீஸ்வரன், உடற்கல்வி ஆசிரியா் சுப்ரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.