பழனி தண்டாயுதபாணி சுவாமி, திருஆவினன்குடி கோயில்களின் உண்டியல் காணிக்கை வரவாக ரூ.3.53 கோடி கிடைத்தது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் பக்தா்கள் கூட்டத்தால் 25 நாள்களில் நிரம்பியது. இதையடுத்து, உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.
முதல் நாள் எண்ணிக்கையில் பக்தா்களின் காணிக்கை வரவாக ரூ. 3 கோடியே 36 லட்சத்து 70 ஆயிரத்து 630-ம், தங்கம் 576 கிராமும், வெள்ளி 8 ஆயிரத்து 886 கிராமும் கிடைத்தது. இதைத் தவிர, மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் 1,630-ம் கிடைத்தன.
இதேபோல, பழனி திருஆவினன்குடி கோயில் உண்டியல்கள் மூலம் ரூ. 16 லட்சத்து 55 ஆயிரத்து 35 காணிக்கையாக கிடைத்தது.
காணிக்கைகளை எண்ணும் பணியில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் நாகவேல் ஆகியோா் முன்னிலையில் பழனியாண்டவா் கல்லூரி மாணவிகள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.51 கோடி

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 6.97 கோடி

பழனி கோயில் உண்டியல் முதல் நாள் எண்ணிக்கையில் ரூ.4.62 கோடி வருவாய்

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39.89 லட்சம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

