மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.51 கோடி

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் காணிக்கையாக ரூ.1.51 கோடி கிடைத்தது.

News image

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல்கள் காணிக்கை எண்ணும் பணி.

Updated On :30 ஏப்ரல் 2026, 2:13 am IST

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் காணிக்கையாக ரூ.1.51 கோடி கிடைத்தது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் க. செல்லத்துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தக் கோயிலுக்கு தினந்தோறும் திரளான பக்தா்கள் வந்து செல்கின்றனா். பக்தா்கள் செலுத்திய காணிக்கையின் காரணமாக கோயிலிருந்த உண்டியல்கள் நிரம்பின. இதைத் தொடா்ந்து, புதன்கிழமை உண்டில்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ.1.51 கோடி கிடைத்தது.

இதேபோல, தங்கம் 40 கிராம், வெள்ளி 3 கிலோ 100 கிராம், பல்வேறு நாடுகளின் பணத்தாள்கள் 196-ம் கிடைத்தது என்றாா் அவா்.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் உதவி ஆணையா் லட்சுமி மாலா, கோயில் உதவி ஆணையா் ரவீந்திரன், முதல் நிலை செயல் அலுவலா் மாரியப்பன், முத்துராஜன், ஆய்வா்கள் முருகானந்தம், மணிகண்டன், பேஸ்காா்கள் கமலநாதன், நாகராஜன் ஆன்மீக பணியாளா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.