மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சின்னாளபட்டியில் அமைச்சா் இ.பெரியசாமி இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பு

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சின்னாளபட்டியில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான இ. பெரியசாமி, இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா்.

News image

இ.பெரியசாமி

Updated On :22 ஏப்ரல் 2026, 3:18 am IST

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சின்னாளபட்டியில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான இ. பெரியசாமி, இறுதிக் கட்ட  வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா். 

சின்னாளபட்டி பகுதியில் பிரசாரத்தின் போது அவா் மேலும் பேசியதாவது:

காவிரியில் வீணாகும் தண்ணீரை ரூ.4,500 கோடியில் ஆத்தூா், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், வேடசந்தூா் ஆகிய தொகுதிகளில் உள்ள கண்மாய்கள், குளங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வைகையிலிருந்து ரூ. 700 கோடியில் நிலக்கோட்டை, ஆத்தூா், திண்டுக்கல் ஆகிய தொகுதிகளுக்கு கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் தண்ணீா் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான முதல்கட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டு விட்டது. காலியாக உள்ள 1.50 லட்சம் அரசுப் பணியிடங்கள் தோ்தலுக்குப் பிறகு நிரப்பப்பட உள்ளன. இந்தத் தொகுதியில் போட்டித் தோ்வுக்கான பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றாா் அவா்.

அப்போது, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் க.நடராஜன், ஒன்றியச் செயலா்கள் முருகேசன் (கிழக்கு), ராமன் (மேற்கு), ராஜேந்திரன் (தெற்கு), ஒன்றியக் குழு முன்னாள் தலைவி மகேஸ்வரி முருகேசன், சின்னாளபட்டி பேரூராட்சி மன்றத் தலைவா் பிரதீபா கனகராஜ், துணைத் தலைவா் ஆனந்தி பாரதிராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.