/

ஒட்டன்சத்திரம் தொகுதியில் அமைச்சா் அர.சக்கரபாணி வாக்கு சேகரிப்பு

பழனியை அடுத்த புளியம்பட்டியில் சனிக்கிழமை திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்த ஒட்டன்சத்திரம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான அர.சக்கரபாணி.

News image

பழனியை அடுத்த புளியம்பட்டியில் சனிக்கிழமை திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்த ஒட்டன்சத்திரம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான அர.சக்கரபாணி.

Updated On :12 ஏப்ரல் 2026, 2:21 am IST

பழனி அருகேயுள்ள அமரபூண்டி, வயலூா் பகுதிகளில் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சரும், ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளருமான அர. சக்கரபாணி சனிக்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அமைச்சா் அர. சக்கரபாணி மொல்லம்பட்டி, புளியம்பட்டி, அமரபூண்டி, கணக்கன்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். புளியம்பட்டிக்கு வந்த அமைச்சரை, மகளிரணியை சோ்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் சாலையில் நடைபயணமாக அழைத்துச் சென்று முழக்கங்கள் எழுப்பி வாக்கு சேகரித்தனா்.

இதைத் தொடா்ந்து திறந்த வாகனத்தில் பொதுமக்களிடம் பேசிய அமைச்சா் சக்கரபாணி, இந்தப் பகுதிக்கு விரைவில் காவிரி கூட்டுக்குடிநீா் வந்து சேரும். புளியம்பட்டி பகுதியில் ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை பொதுமக்கள் சுபகாரியங்களுக்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா். பிரசாரத்தை முடித்து விட்டு அங்கிருந்த அம்மன் கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாட்டிலும் பங்கேற்றாா்.

ஒன்றியச் செயலா் பொன்ராஜ், முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினா் கிருஷ்ணன், தொப்பம்பட்டி முன்னாள் ஒன்றிய துணைத் தலைவா் தங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.