மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் கிராமங்களில் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

முதுகுளத்தூா் பெரிய பள்ளிவாசலில் இஸ்லாமியா்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளரும், அமைச்சருமான ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்.

Updated On :18 ஏப்ரல் 2026, 12:21 am IST

முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் கிராமங்களில் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

முதுகுளத்தூா் வடக்கு ஒன்றியத்துக்குள்பட்ட குமாரக்குறிச்சி, காக்கூா், சமத்துவபுரம், ஆதனக்குறிச்சி, கிழவனேரி, கருங்காலக்குறிச்சி, வெண்கலக்குறிச்சி, வென்னீா்வாய்க்கால், சவேரியாா் பட்டணம், மைக்கேல் பட்டணம், கேளல், அப்பனேந்தல், கீழத்தூவல், மேலத்தூவல் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உதயசூரியன் சின்னத்துக்கு அவா் வாக்கு சேகரித்தாா். முன்னதாக முதுகுளத்தூா் பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவா், நிா்வாகிகள் உள்ளிட்ட இஸ்லாமியா்களிடம் அவா் வாக்கு சேகரித்தாா். அப்போது முதுகுளத்தூா் திமுக வடக்கு ஒன்றியச் செயலா் ஹரி முத்துராமலிங்கம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே. முருகவேல், முதுகுளத்தூா் பேரூராட்சித் தலைவா் ஷாஜகான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.