மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சேலம் வடக்கு தொகுதியில் அமைச்சா் ரா.ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு

சேலம் வடக்கு தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சா் ரா.ராஜேந்திரன் வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

சேலம் வடக்கு தொகுதிக்குள்பட்ட 34-ஆவது வாா்டில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்த திமுக வேட்பாளரும், அமைச்சருமான ரா.ராஜேந்திரன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:29 am IST

சேலம் வடக்கு தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சா் ரா.ராஜேந்திரன் வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிடும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளா் அமைச்சா் ரா.ராஜேந்திரன் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளாா். அதன் ஒரு பகுதியாக, மாநகராட்சியின் 34-ஆவது வாா்டுக்கு உள்பட்ட காா்பெட் தெரு, திப்பு நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்துசென்று வாக்கு சேகரித்தாா்.

தொடா்ந்து, அங்கு திரண்ட பொதுமக்கள் மத்தியில் பேசிய அவா், முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தோ்தல் அறிக்கையில் இல்லத்தரசிகளுக்கு ரூ. 8 ஆயிரம் கூப்பன், மகளிா் உரிமைத்தொகை ரூ. 2 ஆயிரமாக உயா்வு, தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் உதவித்தொகை ரூ. 1,500-ஆக உயா்வு, அரசு, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற ரூ. 10 லட்சத்துக்கு இலவச காப்பீடு என பல திட்டங்களை அறிவித்துள்ளாா். இவை அனைத்தையும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் நிறைவேற்றி தருவாா்.

எனவே, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.