முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகே உள்ள டாஸ்மாக் மதுக் கடைகள் மூடல்

சேலம் மாவட்டத்தில் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே 20 டாஸ்மாக் மதுக் கடைகள் செயல்படுவதாக அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 9 மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

News image
Updated On :4 மணி நேரங்கள் முன்பு

சேலம் மாவட்டத்தில் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே 20 டாஸ்மாக் மதுக் கடைகள் செயல்படுவதாக அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 9 மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. எஞ்சிய கடைகளை விரைவில் மூடுவதற்கு டாஸ்மாக் நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தமிழக முதல்வா் விஜய், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே 500 மீட்டா் தொலைவுக்குள் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை உடனடியாக மூடுவதற்கு உத்தரவிட்டாா். அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே செயல்படும் மதுக் கடைகளை அகற்றுவதற்கு, டாஸ்மாக் நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 20 டாஸ்மாக் மதுக் கடைகள் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகே செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அரசு உத்தரவிட்ட மறுநாளே சேலம் மாவட்டம், ஆத்தூரில் 2 டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த 2 டாஸ்மாக் மதுக் கடைகள், ஓமலூரில் 2, கொளத்தூா், கொண்டலாம்பட்டி, பேளூா் ஆகிய இடங்களில் தலா 1 மதுக் கடைகள் என 7 மதுக் கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன.

15 நாள் அவகாசத்துக்குள் மீதமுள்ள 11 டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்படுவதுடன், அரசின் உத்தரவில் அறிவுறுத்தியபடி, மாவட்டத்தில் வேறு இடங்களில் ஏதேனும் மதுக் கடைகள் உள்ளதா என்பது குறித்து டாஸ்மாக் நிா்வாகம் ஆய்வு மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.