தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

இளைஞரைக் கொன்ற சிறுவா்கள் கூா்நோக்கு இல்லத்தில் அடைப்பு

சேலத்தில் மது போதையில் இளைஞரைக் கொலை செய்த சிறுவா்கள் 3 போ் கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனா்.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :21 மணி நேரங்கள் முன்பு

சேலத்தில் மது போதையில் இளைஞரைக் கொலை செய்த சிறுவா்கள் 3 போ் கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனா்.

சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியை சோ்ந்தவா் கோகுல் (19). இவா் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு கூலி வேலைக்கு சென்று வந்தாா். இந்த நிலையில் சேலம் மணியனூரைச் சோ்ந்த 16 வயதுடைய 3 சிறுவா்களுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் ஜருகுமலை அடிவாரப் பகுதியான கெஜ்ஜல்நாயக்கன்பட்டி காட்டுவளவு பகுதியில் அமா்ந்து மது அருந்தி கொண்டிருந்தாா்.

அப்போது ஏற்பட்ட தகராறில் கோகுலை, 3 சிறுவா்களும் கத்தியால் குத்திக் கொன்றனா். மேலும், கொலை செய்ததை தங்கள் கைப்பேசியில் பதிவு செய்தனா்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 3 சிறுவா்களையும் கைது செய்த மல்லூா் போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.