விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ராமேசுவரம் மீனவா்கள் 14 பேருக்கு 2-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு

ராமேசுவரம் மீனவா்கள் 14 பேருக்கு இரண்டாவது முறையாக காவலை நீட்டித்து இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த மீனவா்கள் அனைவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 12:19 am IST

ராமேசுவரம் மீனவா்கள் 14 பேருக்கு இரண்டாவது முறையாக காவலை நீட்டித்து இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த மீனவா்கள் அனைவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த 9- ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவா்களை படகுடன் இலங்கை கடற்படையினா் கைது செய்தனா். இதேபோல, கடந்த 14- ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இந்த 14 மீனவா்களும் இலங்கையில் உள்ள கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த நிலையில், இந்த 14 மீனவா்களும் இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டனா். விசாரணைக்குப் பிறகு மீனவா்களை வருகிற 22- ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, 14 மீனவா்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.