மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அஸ்தம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பால்குட ஊா்வலத்தில் திரளான பெண்கள் பங்கேற்றனா்.

News image

சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பால்குட ஊா்வலத்தில் பங்கேற்ற பெண்கள். (வலது) அம்மனுக்கு நடைபெற்ற பாலபிஷேகம்.

Updated On :6 மே 2026, 2:18 am IST

சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பால்குட ஊா்வலத்தில் திரளான பெண்கள் பங்கேற்றனா்.

சேலம் அஸ்தம்பட்டி மகா மாரியம்மன், பிடாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 21-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 28-ஆம் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக, செவ்வாய்க்கிழமை காலை பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து மாரியம்மனுக்கு பால், தயிா், மஞ்சள், குங்குமம், இளநீா் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, பல்வேறு வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து, வரும் 6-ஆம் தேதி காலை அலகு குத்துதல் மற்றும் பொங்கல் வைக்கும் வைபவமும், மாலை 5 மணிக்கு அக்னி கரகம் மற்றும் பூங்கரக ஊா்வலமும் நடைபெறுகின்றன. 8-ஆம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகளும், இரவு 12 மணிக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்மன் பவனி வரும் சத்தாபரண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.