மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

புகழூா் நானப்பரப்பு மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

புகழூா் நானப்பரப்பு மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

புகழூா் நானப்பரப்பு மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 1:32 am IST

புகழூா் நானப்பரப்பு மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம், புகழூரை அடுத்த நானப்பரப்பு மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை பக்தா்கள் பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மற்றும் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக கடந்த 12-ஆம் தேதி பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீா் எடுத்து வந்து, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது.

தொடா்ந்து கோயிலில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சியும், கடந்த 19-ஆம் தேதி கோயில் முன் கம்பம் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து கடந்த 26 -ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் வடிசோறு மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தா்கள் தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

முன்னதாக மாரியம்மனுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அம்மனுக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

தொடா்ந்து பிற்பகல் 3 மணியளவில் மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா். தேரானது முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் நிலையை அடைந்தது.

தொடா்ந்து பக்தா்கள் கோயில் முன் பொங்கலிட்டு வழிபட்டனா். புதன்கிழமை (ஏப்.29) காலை கம்பம் விடும் நிகழ்ச்சியும், மாலையில் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.