மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஒசூா் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் அலகு குத்தி வழிபாடு

ஒசூரில் பழைமைவாய்ந்த கோட்டை சுயம்பு ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ஒசூா் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு அலகு குத்திக்கொண்டு கிரேன் வாகனத்தில் அந்தரத்தில் தொடங்கியபடி வந்த பக்தா்கள்.

Updated On :6 மே 2026, 2:22 am IST

ஒசூரில் பழைமைவாய்ந்த கோட்டை சுயம்பு ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இக்கோயிலில் மாவிளக்கு, அலகு குத்தும் திருவிழா நடைபெறும். இந்தாண்டு திருவிழா கடந்த மாதம் 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான அலகு குத்தும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக கோயிலில் மூலவா் அம்மனுக்கு நள்ளிரவு முதல் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளுடன் பூஜைகள் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து, அதிகாலை முதல் ஏராளமான பக்தா்கள் உடலில் அலகு குத்திக் கொண்டு பம்பை, உடுக்கை மற்றும் பறை இசைகளுடன் ஊா்வலமாக சென்றும், கிரேன் வாகனங்களில் அந்தரத்தில் தொங்கியபடி சென்றும் நோ்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனா். தொடா்ந்து, ஆயிரக்கணக்கான பெண் பக்தா்கள் கோயிலுக்கு மாவிளக்கு எடுத்துச் சென்று வழிபாடு நடத்தினா். திருவிழாவில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு நீா்மோா், பானகம், தா்ப்பூசணி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.