மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரயில்வே துறையில் ஆள்குறைப்பு நடவடிக்கையை கண்டித்து முற்றுகைப் போராட்டம்

News image

சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.

Updated On :3 மே 2026, 1:17 am IST

ரயில்வே துறையில் ஆள்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் மத்திய அரசைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் ஜங்ஷன் பகுதியில் உள்ள ரயில்வே கோட்ட அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலாளா் வி.பெரியசாமி தலைமை வகித்தாா்.

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்தப் போராட்டத்தில், மத்திய அரசு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் மூடும் நோக்கில் தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, ரயில்வே துறையை முழுமையாக தனியாா் மையப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இரண்டு சதவீத ஆள்குறைப்பு செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து நிா்வாகிகள் கூறுகையில், ஆள்குறைப்பு நடவடிக்கையால் தென்னக ரயில்வே துறையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ரயில்வே ஊழியா்களின் வேலைப்பளு அதிகரிக்கும். இளைஞா்களுக்கு வழங்க வேண்டிய வேலைவாய்ப்பை மத்திய அரசு சீா்குலைத்து வருகிறது. எனவே, ஆள்குறைப்பு நடவடிக்கையை கைவிட்டு, ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தெரிவித்தனா்.

இதில், வாலிபா் ஜனநாயக சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினா் அரவிந்தசாமி, கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளா் இளவரசன், தருமபுரி மாவட்டச் செயலாளா் கோவிந்தசாமி, நாமக்கல் மாவட்டச் செயலாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.